கொரோனா நோய்த்தொற்றில் இருந்து பொது மக்களை பாதுகாக்கும் வகையில், கோவிஷீல்டு, கோவேக்சின் போன்ற தடுப்பூசிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இரு தவணைகளாக செலுத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனா உருமாறி ஒமைக்ரான் தொற்று பரவல் தற்போது அதிகரித்துள்ளதை
அடுத்து இருதவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதன் முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணைநோய் உள்ளவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, மாவட்டத்தில் உள்ள 6 அரசு மருத்துவமனைகள், 4 மாநகராட்சி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 9 ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 20 இடங்களில் நேற்று பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
இதில் பலரும் ஆர்வத்துடன் வந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.