Logo of Tirunelveli Today

வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம் .

July 15, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.
  • வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை , மேலும் பல திட்டங்கள் பற்றி ஆட்சியர் விஷ்ணு தகவல்.

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப மனுக்கள் ஏற்றுக்கொள்ள படும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்

இது பற்றிய செய்தி குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது;

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்தவித வேலை வாய்ப்பும் கிடைக்காது பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசின் இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது . உதவித்தொகை விரும்பும் இளைஞர்கள் அதற்கான மனுக்களை விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை பற்றிய மற்ற விவரங்கள்:

மாதம் 300 ரூபாய் எஸ்.எஸ்.எல். சி தோல்வி அடைந்தவர்களுக்கும், மாதம் 300 ரூபாய் எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்றவர்களுக்கும், மாதம் 400 ரூபாய் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றோர்களுக்கும், பட்டதாரிகளுக்கு மாதம் 600 ரூபாய் என 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இந்த தொகை நேரடியாக மனுதாரர் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருப்பது மற்றும் தொடர்ந்து பதிவை புதுப்பித்தும் வருபவராக இருந்தால் மட்டுமே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து திட்டத்தில் பயன்பெற முடியும்.

45 வயது மிகாத ஆதிதிராவிட பழங்குடியினர், 40 வயது மிகாத பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர பிரிவினராக இருக்க வேண்டும் . ரூபாய் 72000க்குள் குடும்ப வருமானம் இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். ஆனால்
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு நிறைவு பெற்றவராக இருக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் மற்ற அலுவலகத்தில் உதவித்தொகை பெறாதவராகவும் இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து அவர்கள் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்கும் போது அவர்கள் முக்கியமாக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆன்லைன் பிரிண்ட் அவுட் அல்லது https// tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து இருக்க வேண்டும்.

வருவாய் துறை சார்ந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் முத்திரையுடன் கூடிய கையொப்பம் பெற்ற வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் சாதி சான்றிதழ், அசல் கல்வி சான்றிதழ், மாற்று சான்றிதழ் , வங்கி கணக்கு புத்தகம், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும்.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify