Logo of Tirunelveli Today

Yarunga Intha Piyush Manush? Appadi Ever Enna Pannunar?

July 25, 2016
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

மனுஷன வெட்டுனாக் கூட கேள்வி கேட்காத இந்த சமூகத்துல “மரத்தை வெட்டுனா நான் கண்டிப்பா கேள்வி கேட்பேன்”னு சொல்றவர் தான் பியுஷ் மனுஷ்.கனிம கொள்ளையைத் தடுக்க, அதற்கு எதிராக போராடுபவர்கள் தான் பியுஷ் மற்றும் அவரது குழுவினர்.
பிறப்பால் இராஜஸ்தானியாக இருந்தாலும், தமிழனை திரும்பி பார்க்க வைத்தவர், தன்னுடைய உண்மையான பெயரான பியுஷ் சேத்தியா என்பதை பியுஷ் மனுஷ் என மாத்தி இருக்கார். இவரோட பெயர்ல வர்ற மனுஷ் என்பதற்கு ஜாதியையோ மதத்தையோ சாராத மனிதன்னு அர்த்தமாம்.
இவர் செய்த பல விஷயங்கள் மட்டுமில்ல, இவர் பெயர் கூட அறியப்படாத ஒருவர். தருமபுரியை சுற்றியுள்ள நீர் நிலைகளையும், ஏரிகளையும் தத்தெடுத்து சுத்தம் பண்ணிட்டு வர்றார். கிட்டத்தட்ட 150 ஏக்கர் நிலங்களை வறட்சி மாவட்டமான தருமபுரியில் நண்பர்களின் துணையுடன் வாங்கி 1 லட்சம் மரங்களையும், 20 நீர் நிலைகளையும் உருவாக்கியிருக்கிறார். இவர் உண்டாக்கிய இந்த கூட்டுறவு காட்டில் இயற்கை சார்ந்த தொழில்கள் செய்ய விரும்பினால் செய்யும் வாய்ப்புகளையும் கொடுத்திருக்கிறார்.

இயற்கைக்காகவும், நீதிக்காகவும் குரல் கொடுக்கும் இவரின் மிக முக்கிய குறிக்கோள்கள்,
1. நீர் நிலைகளை உருவாக்குதல் ( creating water)
2. வனங்கள் உருவாக்குதல் (creating oasis)
3. இயற்கையை மேம்படுத்துதல் (creating nature paradise)
4. மனித வளாங்களை உறிங்சும் பெரு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம் (Activism)
5. இயற்கை வளங்களைப் பேணுதல் (conservation)
6. நிரந்தமான வளர்ச்சி ( sustainable development)
இவைகள் சமூகம் நலம் பெற இவரும் அவருடைய குழுக்களும் நம்மிடம் வைக்கும் வேண்டுகோள்கள்.

“ நியாயத்திற்கு போராட்டமும், இயற்கையில் உண்ணாவிரதமும்” என்று சொல்லும் இவர் சமூக ஆர்வலர் மட்டுமில்லாமல் நம் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் விவசாயிகளின் வாழ்க்கை துணைவன் என்றும் சொல்லலாம்.
இவரை கைது செய்ய பல காரணங்கள் மறைமுகமாக வைக்கப்பட்டாலும் தன்னைப் போல் அனைத்தையும் நேசிக்கும் இவர் ஒரு அபூர்வமானவர் தான்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify