Logo of Tirunelveli Today

கணபதிக்கு பிடித்தமான அருகம்புல் வழிபாடு

September 2, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

நாம் வணங்கும் முதல் கடவுள் விநாயகர் பெருமான். எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் முதலில் விநாயகர் பெருமானை தான் நாம் வழிபடுகின்றோம் ‌ விநாயகருக்கு மிகவும் பிடித்தமான பொருட்களை தான் விநாயகர் சதுர்த்தி அன்றும் படைக்கின்றோம்.

விநாயகருக்கு உகந்த நாளான சங்கடகர சதுர்த்தி அன்று அருகம்புல் வைத்து வழிபடும் போது சங்கடங்கள் அனைத்தையும் தீர்த்து வைப்பார் விநாயகர் பெருமான் .அருகம்புல் ஆற்றலையும் பலனையும் தெரிந்து கொண்டு அருகம்புல்லை அனைவரும் மாலையாக விநாயகப் பெருமானுக்கு சாற்றுகின்றனர் .

பிள்ளையார் வழிபாடு என்பது மிகவும் எளிமையானது. அந்த வழிபாடு மிகவும் அற்புதமானது .

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி பல்விருக மாகிப் பறவையாய் பாம்பாகி...'

என்று சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் முதல் உயிரினமாக அருகம்புல்லை தான் குறிப்பிடுகின்றார்.

அருகம்புல் தாவரம் எங்கும் இருக்கக்கூடிய உன்னதமான தாவரம். விநாயகரும் அனைத்து இடங்களிலும் இருப்பார் என்பதை நமக்கு உணர்த்துகின்றது.

விநாயகருக்கு பிடித்தமான பொருள் என்று பார்த்தால் அருகம்புல் முதல் பொருளாக விநாயகர் பெருமானுக்கு சாத்தப்படுகின்றது. பலவண்ண மலர்கள் விநாயகப் பெருமானுக்கு நாம் படைத்தாலும் மிகவும் குளிர்ச்சி பெற்ற அருகம்புல் சாற்றி வழிபடும்போது அதீக சக்தி பெற்று நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும்.

அனலாசுரன் என்னும் அரக்கன் பூலோகத்தை வதம் செய்த போது விநாயகர் பெருமான் கோபம் கொண்டு அனலாசுரனை விழுங்கி விடுகிறார். வயிற்றுக்குள் சென்ற அனலாசுரனின் வெப்பத்தை தாங்க முடியாமல் விநாயகப் பெருமானே துன்பப்படும் போது சப்த ரிஷிகளும் அங்கு வருகின்றனர்.

ஒரு சாண் அளவுள்ள 21 அருகம்புல்லை விநாயகர் மீது சாத்துகின்றனர். விநாயக பெருமான் சூடு தணிந்து திருமேனி குளிர்ச்சி பெறுகின்றார். உலகமே அமைதி அடைகின்றது. அன்றிலிருந்து விநாயகர் பெருமானுக்கு அருகம்புல் சாற்றி வணங்கினால் , குளிர்ச்சி நிறைந்த வாழ்க்கை தனை நான் அருள்வேன் என்று மக்களுக்கு விநாயக பெருமான் அருள் பாவிக்கின்றார்.

வாழ்க்கையில் விரைவில் திருமணம் நடப்பதற்கும், வாழ்க்கையில் மன குழப்பங்கள் தீர்ந்து மகிழ்ச்சி பிறப்பதற்கும், செல்வம் சேருவதற்கும், குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கும்… என வாழ்வினில் பிரச்சனைகள் பலவாக இருப்பினும் தொடர்ந்து ஐந்து வாரங்கள் சங்கடகர சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுங்கள். 108 முறை ' ஓம் கம் கண் கணபதேய நமஹ' எனும் விநாயகர் மந்திரத்தை சொல்லி வழிபட்டு வாழ்க்கையில் என்றும் வளம் காணுங்கள்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify