செய்திக்குறிப்புகள்:
- நெல்லை புத்தக திருவிழாவில் மாணவர்கள் பயிற்சி பட்டறை.
- ஓரே நாளில் ஒரு புத்தகம் தயாரிக்க முயற்சி.
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பாக பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வரும் பொருநை நெல்லை புத்தக திருவிழாவில் நாள்தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பயிற்சிகள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்று (24/02/2022) காலை 8.30 மணிக்கு தொடங்கி மாலை 6.00 மணி வரை ஒரே நாளில் ஒரு புத்தகத்தை உருவாக்கும் முயற்சி பயிற்சி பட்டறையில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் கல்லூரி மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வண்ணம் சிறுகதை, கட்டுரை, கவிதை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பற்றி எழுதி, அதனை கணினி தட்டச்சு செய்து இன்றே நூலாக்கம் செய்து சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நூலானது புத்தக திருவிழாவின் நிறைவு நாளான வரும் அன்று மாணவர்களின் படைப்பாற்றல் தொகுப்பு புத்தகமாக மாவட்ட நிர்வாகம் சார்பாக வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Image source: facebook.com

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.