Logo of Tirunelveli Today

தூத்துக்குடியில் தாழிகளைத் திறந்து ஆய்வு செய்யும் பணி தொடக்கம்

August 11, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • தூத்துக்குடி மாவட்டம் சிவ கலையில் மார்ச் மாதம் 30 ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது.
  • முதுமக்கள் தாழிகளை திறந்து 200க்கும் மேற்பட்டபொருட்களை குறித்து ஆய்வு செய்யும் பணி புதன்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அமைந்துள்ள சிவ கலையில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது . புதன்கிழமை முதுமக்கள் தாழிகளை திறந்து பொருட்களை குறித்து ஆய்வு செய்யும் பணி தொடங்கியது .

குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் அவர்கள் கோரிக்கை விடுத்தார் . சிவகலை பரம்பு பகுதிகளில் அகழாய்வு பணி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அந்த கோரிக்கையில் தெரிவித்திருந்தார்.

அதன்படி 2020 ஆம் ஆண்டு முதல் கட்ட அகழாய்வு பணி மற்றும் 2021 ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட அகழாய்வு பணியும் நடைபெற்றது. 3 ஆம் கட்ட அகழாய்வு பணி மார்ச் மாதம் 30 ஆம் தேதி தொடங்கியது. 29 லட்சம் மதிப்பீட்டில் இப்பணி தொடங்கப்பட்டது .

சிவகளை பரம்பூர், ஸ்ரீ மூலக்கரை ஆகிய இடங்கள் புதையிடை பகுதியாகவும் பொட்டல் கோட்டை பராக்கிரமபாண்டி திரடு ஆகியவை வாழ்விடப் பகுதியாகவும் பிரிக்கப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வந்தன.

பாசிமணிகள், வளையல்கள், எழும்பாலான கூர்முனை கருவிகள், பட்ட சில்லுகள், சக்கரம், புகைப்படங்கள், காதணிகள் என 200க்கும் மேற்பட்ட பொருள்கள் அகழாய்வு பணியில் கண்டறியப்பட்டுள்ளன. 34 முதுமக்கள் தாழிகளைத் திறந்து உள்ளே இருக்கும் பொருட்களை ஆய்வு செய்யும் பணி புதன்கிழமை அன்று தொடங்கியது.

சிவகலை அகழாய்வு இயக்குனர் பிரபாகரன் , மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபியல் துறை பேராசிரியர் குமரேசன், ஆகியோர் தலைமையில் குழுவினர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Image source: tamiloneindia.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify