செய்திக்குறிப்புகள்:
அரசு அருங்காட்சியகம் சார்பில் மகளிர் தின போட்டிகள்.
போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் மூன்று நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
மகளிர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் திருநெல்வேலி மாவட்ட அரசு அருங்காட்சியகம் பல்வேறு போட்டிகளை நடத்த உள்ளதாக மாவட்ட காப்பாட்சியர் தெரிவித்துள்ளார்.
இதில் நாளை சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு பாளையங்கோட்டை அருங்காட்சியக வளாகத்தில் வைத்து பெண்களின் முன்னேற்றம் என்ற தலைப்பில் புதுக்கவிதை போட்டி, கோலப்போட்டி, பாரதியார் பாடல்களை பாடும் போட்டி,மெஹந்தி போட்டி, பெண்ணின் கடமை என்ற தலைப்பில் பேச்சு போட்டி ஆகியவை நடைபெற உள்ளது. இதில் பங்குகொண்டு வெற்றிபெறும் முதல் மூவருக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.