- விவசாயிகள் கோரிக்கை ஏற்று பாபநாசம், மணிமுத்தாறு அணைகளிலிருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறப்பு
- நெல்லை மாவட்டத்தில் கார் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாய் நெல் நாற்றுகளை நட தொடங்கினர்.
இலையுதிர் காலம் என்பது தென்னிந்திய மாநிலங்களான தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு, அல்லது நடவு தொடங்கி சாகுபடிக்கான கால அளவை மகிழ்ச்சியோடு குறிக்கும் காலம் என்பது விவசாயிகளின் கருத்து.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு மழை பெய்ததால் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் நீர் நிரம்பியது. பாபநாசம் மணிமுத்தாறு அணைகளில் நீர்மட்டம் 65 அடிக்கும் அதிகமாக உள்ளது .
இந்த நிலையில் கார் சாகுபடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்." ஒரு பிடி சோறு இல்லையேல் உயிர் இல்லை" எனும் விவசாய தத்துவத்தை புரிந்துள்ள
அரசு தொடர்ந்து பாபநாசம் மணிமுத்தாறு அணைகளிலிருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் தண்ணீர் திறந்துவிட ஏற்பாடு செய்துள்ளது.
வடக்கு-தெற்கு கோடை மேலழகியான், நதியுண்ணி, கன்னடியன் கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் அம்பை சேரன்மாதேவி பாபநாசம் வீரவநல்லூர் கல்லிடைகுறிச்சி பகுதிகளில் வயல்களில் உழுது பணி நடைபெறுகிறது.
விவசாயிகள் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதும் நெல் நடவு செய்யும் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர் .
வடக்கு அரியநாயகிபுரம் பகுதியில் உள்ள விவசாயிகள் அதிகம் பேர் கிணற்றுப்பாசனம் உள்ளவர்கள் என்பதால் ஏற்கனவே நெல் நாற்றுகளை தயார் வைத்த நிலையில் நெல் நடவு பணியில் அவர்களும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
Image source: dailythanthi.com