Logo of Tirunelveli Today

நெல்லை மாவட்டம் மானூர் அருகே கண் பரிசோதனை முகாம்

August 8, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • திருநெல்வேலி மாவட்டம் தெற்கு ரயில்வே தரப்பு சார்பில் அறிக்கை அறிவித்திருந்தது.
  • அதன்படி திருநெல்வேலியிலிருந்து தாம்பரம் வாராந்திரிய அதிவேக சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் இயக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் திருநெல்வேலியிலிருந்து தாம்பரம் வாராந்திரிய அதிவேக சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் இயக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட பயணிகளின் போக்குவரத்து வசதிகளை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு தென்காசி வழியாக இயக்கப்பட்டு வந்த கோடைகால வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வந்தது. கடந்த மாதம் அதிவிரைவு ரயில் சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு ‌ ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் வாராந்திரிய அதிவேக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி திருநெல்வேலியில் இருந்து தாம்பரம் செல்லும் வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் (06004) ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 7 மணிக்கு புறப்படும். சேரன்மகாதேவி அம்பாசமுத்திரம் கீழக்கரை பாவூர்சத்திரம் தென்காசி வழியாக தாம்பரத்திற்கு திங்கட்கிழமை அன்று காலை 9 மணிக்கு வந்தடையும்.

அதுபோலவே மீண்டும் தாம்பரம் திருநெல்வேலி வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில், ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை திங்கட்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 10. 20 மணிக்கு புறப்படும். மதுரை, தென்காசி, அம்பாசமுத்திரம் வழியாக அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை காலை 10.40 மணிக்கு திருநெல்வேலி மீண்டும் வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் வாராந்திரிய சிறப்பு அதி விரைவு ரயில் திருநெல்வேலி தாம்பரம் இடையே தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Image source: indianrailinfo.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify