Logo of Tirunelveli Today

நெல்லை தொடர் மழை காரணமாக பாபநாசம் அணை நீர்மட்டம் உயர்வு

August 5, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை மாவட்டத்தில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.
  • தொடர் மழை காரணமாக பாபநாசம் அணை ஒரே நாளில் 9 அடியாக நீர்மட்டம் உயர்வு.

திருநெல்வேலி மாவட்டம் நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்வதால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடியாக உயர்ந்து இருக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 11:30 மணி அளவில் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது . மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருவதால் நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் பெருக்கெடுத்து அணைகளுக்கு வருகிறது .

இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 75. 30 அடியாக இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் 84 அடி என உயர்ந்து இருக்கிறது. குடிநீருக்காக 1000 அடி கனநீர் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது .

சேர்வலாறு நீர்மட்டமும் ஒரே நாளில் 17அடி உயர்ந்துள்ளது ‌ . நேற்று முன் தினம் 100 அடி கணநீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. தொடர் மழையின் காரணமாக நேற்று நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 17.22 அடி உயர்ந்து 117.78 அடியாக உயர்ந்துவிட்டது .

நேற்று காலை பார்க்கும்போது மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 118 அடி இருந்தது. ‌இப்பொழுது 199 கன அடியாக உயர்ந்திருக்கிறது..

நெல்லை தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் மழை முடிவடைந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு:

பாபநாசம் 15, சேர்வலாறு -6, மணிமுத்தாறு -7, அம்பை-4, பாளையங்கோட்டை 4, கலக்காடு -1, சேரன்மாதேவி -4 ,தென்காசி- 4, சிவகிரி -3, செங்கோட்டை-7, ஆய்க்குடி -2, குண்டாறு- 62, ராமநதி-6 கடனாநதி -18, கருப்பாதி - 12 , நெல்லை-5 என நெல்லை தென்காசி மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் பெய்த மழையின் மில்லி மீட்டர் கணக்கிடப்பட்டுள்ளது.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify