Logo of Tirunelveli Today

குமரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்கள் தயார்!

February 17, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற 19/02/2022 அன்று நாகர்கோவில் மாநகராட்சிக்கும், கொல்லங்கோடு, குழித்துறை, பத்மநாபபுரம், குளச்சல் ஆகிய 4 நகராட்சிகளுக்கும், 51 பேரூராட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 10 லட்சத்து 41 ஆயிரத்து 624 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள நிலையில் மொத்தம் 1,236 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும். நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரி, அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி, கொல்லங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி, மார்த்தாண்டம் நேசமணி நினைவு கல்லூரி, ஆற்றூர் கல்லூரி, பத்மநாபபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, லெட்சுமிபுரம் கல்லூரி ஆகிய 8 இடங்கள் வாக்குப்பதிவு எண்ணிக்கை மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இயந்திரங்கள் வைக்கப்பட உள்ள இடங்களில் கட்டங்கள் வரையப்பட்டு, அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு உரிய எண்களும் எழுதி வைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify