Logo of Tirunelveli Today

விருதுநகர் சந்தை நிலவரம்! உளுந்து விலை சரிவு!

January 31, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

விருதுநகர் சந்தையில் 100 கிலோ மூடை உளுந்து ரூ.200 குறைந்து விற்பனை ஆனது. இதனால் முழு உளுந்து ரூ.8100 முதல் ரூ.9300 வரையிலும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.7300 முதல் ரூ.9800 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.10100 முதல் ரூ.11100 வரையிலும் விற்பனை ஆனது. இது தவிர துவரை 100 கிலோ மூடை ரூ.100 விலை அதிகரித்து ரூ.6400 முதல் ரூ.7700 வரையிலும், துவரம் பருப்பு ரூ.10700 முதல் ரூ.11600 வரையிலும், மல்லி லைன் ரகம் 40 கிலோ ரூ.4 ஆயிரம் முதல் ரூ. 4400 வரையிலும், மல்லி நாடு ரகம் ரூ.3400 முதல் ரூ.3500 வரையிலும், குண்டு வத்தல் ரூ.27 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரையிலும், ஏ.சி. வத்தல் ரூ.1000 உயர்ந்து ரூ.17 ஆயிரம் முதல் ரூ.19 ஆயிரம் வரையிலும், புது வத்தல் ரூ. 7000 முதல் ரூ.10500 வரையும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify