Logo of Tirunelveli Today

விருதுநகர் மாவட்ட அரசு பள்ளி மாணவ - மாணவிகள் சாதனை!

February 1, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

விருதுநகர் மாவட்ட அரசு பள்ளியில் பயின்ற 13 மாணவ - மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள எம்.ரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 324 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஐஸ்வர்ய லட்சுமி, மெட்டுகுண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 231 மதிப்பெண்கள் பெற்ற மாணவி அபிநய லட்சுமி, தும்முசின்னம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 212 மதிப்பெண்கள் மாணவி மாதவி, சுந்தரபாண்டியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 219 மதிப்பெண்கள் பெற்ற மாணவி சக்தி பவித்ரா, விருதுநகர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று 213 மதிப்பெண்கள் பெற்ற மாணவி கற்பகலட்சுமி, எம்.ரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 332 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் கண்ணன், அதே பள்ளியில் பயின்று 342 மதிப்பெண்கள் பெற்ற மாணவி பேபிசர்மிளா, பந்தல்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 219 மதிப்பெண்கள் பெற்ற மாணவி அகல்விழி, ராஜபாளையம் எஸ்.எஸ்.அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 290 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஐஸ்வர்யா, ராஜபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 262 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் சுந்தரேஸ்வரன், காரியாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 227 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் முத்துராஜா, மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 364 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் சாலைமுத்து, சங்கரலிங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 335 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் ஜெயகிருஷ்ணா ஆகியோர்கள் மருத்துவக்கல்வி பயில்வதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify