Logo of Tirunelveli Today

விநாயகர் பெருமானுக்கு பிடித்தமான அருகம்புல் மாலை

May 25, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

அருகம்புல் மாலை விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது ஏன்! என்பதற்கு மிக அழகான ஒரு தத்துவத்தை பற்றி பார்ப்போமா!

எமனுடைய மகன் அனலாசுரனுக்கு ஏன் இந்த ஆணவம்! அதனால் தேவர்கள் படும் துன்பங்கள்தான் எத்தனை ! இதைப் பார்த்த கணபதிக்கு வந்தது கோபம். புறப்பட்டு விட்டார் போருக்கு...

அவனை அழிப்பதற்காக தன்னுடைய பூதகணங்களை எல்லாம் அழைத்துக்கொண்டு அனலாசுரனை நோக்கி விநாயகப் பெருமான் சென்று போர் புரிகின்றார்.

அனலாசுரனோ தன்னுடைய அனல் எனும் தீயினால் பூதகணங்கள் அனைவரையும் அழித்து விடுகின்றான்

அதனால் விநாயகர் கோபம் கொண்டு அனலாசுரனை விழுங்கிவிட ... ஆனால் அவனது அனலின் வெப்பத்தை தாங்க முடியாமல் விநாயகப்பெருமான் சற்றே அல்லல் படுகிறார்.

கங்கை நீரை குடம் குடமாக கொண்டுவந்து அபிஷேகம் செய்யப்படுகிறது. அனல் சிறிதும் குறையவில்லை. கடைசியாக ஒரு முனிவர் அருகம்புல்லை விநாயகரின் தலையில் உடல் குளிர்ந்தது உள்ளம் குளிர்ந்தது உவகை பெருக முனிவரை போற்றுகிறார்.

வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தரக்கூடிய மகத்துவம் வாய்ந்து அறுகம்புல்லின் சிறப்பை உலகம் அறிய வேண்டும் என்பதற்காக...

'எம்மை பக்தியோடு வேண்டுவோர் அருகம்புல் மாலையை எனக்கு சாத்தி வழிபட்டால் - வெப்பம் எனும் துன்பத்தை நீக்கி குளிர்ச்சியான இன்பகரமான வாழ்க்கையை யான் கொடுத்து அருள் புரிவேன்' என கூறி அருள் பாலிக்கின்றார். இதுதான் அறுகம்புல் வழிபாட்டிற்கான ஐதீக வரலாறு.

சங்கடஹர சதுர்த்தி தோறும் கணபதிக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட்டு ..கவலை எனும் நிலை மறந்து இனிமை, மகிழ்ச்சி மலர்ச்சி , சாதனை வெற்றி எனும் வார்த்தைதனை உணர்ந்து , பல வெற்றிகளை குவித்து இனிதான வாழ்வு பெற்று மனிதப் பிறவியின் பயனை‌ நிறைவு செய்வோம்.
செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify