Logo of Tirunelveli Today

வெள்ள நீர் கால்வாய் திட்டப் பணிகளை விரைவுபடுத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு

June 16, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக் குறிப்புகள்

  • நெல்லை மாவட்டம் அக்டோபர் மாதத்தில் வெள்ள நீர் கால்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கை சபாநாயகர் அப்பாவு தகவல்
  • மேல்மட்ட‌பாலம் ஆறு வழி சாலை திட்டமிடப்பட்டு 17 கோடியே 9 லட்சம் நிதி ஒதுக்கீடு பணிகள் தொடங்கப்பட்டது

நெல்லை மாவட்டம் வெள்ள நீர் கால்வாயில் அக்டோபரில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்

தாமிரபரணி ஆற்றில் வெள்ள காலங்களில் கடலில் மிதக்கும் 13 மில்லியன் கன அடி உபரிநீரை , நாங்குநேரி, ராதாபுரம் , திசையன்விளை , சாத்தான்குளம் உள்ளிட்ட வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தார். தாமிரபரணி ஆறு நம்பியாறு மற்றும் கருமேனியாறு ஆகியவற்றை இணைத்து நதிநீர் இணைப்புத் திட்டத்தை அதாவது வெள்ளநீர் கால்வாய் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

ரூ 369 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது முதலமைச்சராக மு க ஸ்டாலின் இந்தத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே மூன்று நிலைகளில் பணிகள் முடிக்கப்பட்டு 4 வந்து நிலை பணிகள் நடந்து வருகிறது

பொன்னாங் குடி அருகில் நெல்லை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நதிநீர் இணைப்பு திட்டம் குறுக்கே மேல்மட்ட‌பாலம் ஆறு வழி சாலை திட்டமிடப்பட்டு 17 கோடியே 9 லட்சம் நிதி ஒதுக்கீடு பணிகள் தொடங்கப்பட்டது .

இந்த பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார்வையிட்ட சபாநாயகர் அப்பாவு விரைந்து முடிக்க உத்தரவிட்டார் . அதன் பிறகு அந்த பணிகள் மும்முரமாக நடந்து வந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக பாலம் கட்டும் பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டதால் விவசாய மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

விவசாய மக்களின் கவலையை தீர்க்கும் பொருட்டு….வெள்ளநீர் கால்வாய் திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு அக்டோபர் மாதம் அதில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதிக முயற்சி எடுத்து வருகிறார்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify