Logo of Tirunelveli Today

கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் ஊர்ந்து சென்ற வாகனங்கள்

July 28, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லையில் நேற்று ஒரு மணி நேரம் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது.
  • சாலைகளில தண்ணீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் அனைத்தும் தண்ணீரில் ஊர்ந்து சென்றன.

திருநெல்வேலி மாவட்டம் நேற்று திடீரென்று ஒரு மணி நேரம் மழை இடைவிடாது கொட்டி தீர்த்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். சாலைகளில் தண்ணீர் தேங்கியால் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து சென்றன

கடந்த சில வாரங்களாகவே நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பரவலாகவே சென்ற வாரம் மழை பெய்து இருந்தாலும் மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

நேற்று மதியம் 2-30 ,மணி அளவில் திடீரென்று வானம் மேகம் மூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. 3 மணியளவில் சாரலாக மழை தூறியது . 3-45 மணிக்கு இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது .

நெல்லை சந்திப்பு டவுன் வண்ணாரப்பேட்டை பாளையங்கோட்டை பகுதிகளில் ஒரு மணி நேரம் இடைவிடாது மழை கொட்டியதால் , மழை நீர் சாலை தெருக்களில் நிரம்பியது.

வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் தாழ்வான பகுதிகளிளிலும், ரோடுகளிலும் தேங்கி நின்றது.

நெல்லை சந்திப் பிள்ளையார் கோவில் , மற்றும் டவுன் மார்க்கெட் பகுதிகளில் அதிக தண்ணீர் தேக்கத்தினால் பொதுமக்கள் சிரமத்துடன் நடந்து சென்று பொருட்களை வாங்கிச் சென்றனர்.

பாளையங்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் மின்தடையும் ஏற்பட்டது. இதேபோல நெல்லை சந்திப்பு பகுதிகள் மற்றும் மேம்பாலத்தின் கீழ் பகுதிகளில் குளம் போல தண்ணீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி, பாபநாசம், சேரன்மாதேவி, முலைக்கரைப்பட்டி ,மணிமுத்தாறு, பேட்டை ,ரெட்டியார்பட்டி, சுத்தமல்லி, கல்லூர் போன்ற பகுதிகளிலும் மழை பெய்தது.

மழை பதிவாகிய விவரங்கள்;

நெல்லையில் 16 மில்லி மீட்டர், பாளையங்கோட்டையில் 7 மில்லி மீட்டர் , சேரன்மாதேவியில் 2 மில்லி மீட்டர் , பாபநாசத்தில் 9 மில்லி மீட்டர், நாங்குநேரியில் 36 மில்லி மீட்டர் என மழையின் அளவு பதிவாகியுள்ளது.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்
1 2 3 21

இதையும் படிக்கலாமே..

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2023 Tirunelveli Today | All Rights Reserved.
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify