Logo of Tirunelveli Today

பாளையங்கோட்டை பிரசன்ன விநாயகர் முருகன் கோவிலில் வருஷாபிஷேக விழா

July 15, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மேலவாசல் பிரசன்ன விநாயகர்
மற்றும் சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இத்திருக்கோவில் அன்றைய ஆங்கிலேயருடைய ஆட்சியின் போது கோட்டையாக அமையப்பெற்று காவல் நிலையமாக இருந்து வந்தது.

விநாயகர் மற்றும் முருகப்பெருமான் சன்னதிகள் கோட்டையின் கீழே அமைந்துள்ளது அவை சிதிலமடைந்து இருந்தாலும் பக்தர்களின் ஸ்தலமாக இருந்து வருகிறது.

நேற்று அந்த புகழ் பெற்ற சன்னதியில் பத்தாம் ஆண்டு வருஷாபிபிஷேக விழா நடைபெற்றது . மூன்று நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பான விழாவில் முதல் நாள் சண்முகார்ச்சனை, இரண்டாவது நாள் அருணகிரிநாதர் குருபூஜையென நடைபெற பக்தர்கள் பக்தி பரவசத்தோடு கண்டு களித்தனர்.

நேற்று உத்திராட நட்சத்திரத்தில் விழாவின் முக்கிய நிகழ்வான வருஷாபிஷேக அபிஷேக விழா நடைபெற, அந்த விழாவில் காலை விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, மகா கணபதி ஹோமம், பூரணாகுதி தீபாரதனை அனைத்தும் கோலாகலமாக நடைபெற்றது.

தொடர்ந்து மிகவும் ஐதீக முறையான கடம் புறப்பாடு நடந்ததும் பிரசன்ன விநாயகர் மற்றும் சுப்பிரமணிய சுவாமி விமான கோபுரங்கள் மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து மூர்த்திகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை மற்றும் இரவில் பிரசன்ன விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திரு வீதிவுலா மேள வாத்தியத்தோடு வான வேடிக்கையோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify