Logo of Tirunelveli Today

வள்ளியூர் யூனியனில் பள்ளி வளர்ச்சி திட்டத்திற்கு ரூ 87 லட்சம் ஒதுக்கீடு

June 16, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்தி சுருக்கம்

  • வள்ளியூர் யூனியன் ஆணையாளர் நடராஜன் தலைமையில் ரூ 87 இலட்சத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
  • யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பள்ளிகளுக்கு ரூ 87 லட்சம் செலவில் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

பள்ளிக்கூடம், பள்ளி அல்லது பாடசாலை என்பது அடிப்படைக் கல்வி கற்பிக்கும் இடம் எனப் பொருள்படும். மாணவர்களின் அறிவை மேம்படுத்தி அவர்கள் வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாக அமைவது பள்ளிக்கூடம். அதை ஆக்கப்படுத்தும் விதமாக ரூபாய் 87 லட்சம் செலவில்…

  1. அடங்கார்குளம் பஞ்சாயத்து சவுந்தரலிங்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 50 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் மற்றும் கழிவறை கட்டுவதற்கு பூமி பூஜை
  2. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ 20 ரூபாய் லட்சத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை
  3. பண்ருட்டி அருகே பாம்பன் குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 17 லட்சம் பேர் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிட திறப்பு விழாவும் நடைபெற்றது.

யூனியன் ஆணையாளர் நடராஜன் தலைமை தாங்க, வள்ளியூர் யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

பணகுடி நகர பஞ்சாயத்து தலைவர் தனலக்ஷ்மி , துணைத் தலைவர் புஷ்பராஜ் லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்து தலைவர் கட்டித் தங்கம் மணி வர்ண பெருமாள், முன்னாள் தலைவர் மணிவண்ணன் பெருமாள், சவுந்திர லிங்கபுரம் பஞ்சாயத்து தலைவர் வசந்தா முருகேசன் மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர் , சாந்தி ஒன்றிய கவுன்சிலர்கள் மல்லிகா, அஜந்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு உலக அறிவு, வியாபாரம் ,வர்த்தகம், தொழிற் புரட்சி , வேலைவாய்ப்பு என பெரிய விழிப்புணர்வை கொடுக்கக்கூடியது கல்வி . அதை கற்பிக்கும் பள்ளிகளுக்கு, ரூ 87 லட்சம் அரசு கொடுக்கும் இந்த முன்னேற்ற பணிக்கு திருநெல்வேலி டுடே மகிழ்ச்சி தெரிவிக்கின்றது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify