செய்திக் குறிப்புகள் :
- நெல்லையில் வள்ளியூர் அருகே திடீரென பரவிய காட்டுத்தீ
- தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர் ஏர்வாடி ரோட்டில் சாமியார் பொத்தை அருகில் ஜெபத்துரை என்பவருக்கு சொந்தமான தோட்டம் இருக்கின்றது.
அந்தத் தோட்டத்தில் முள் மற்றும் தேவையற்ற செடிகளை அகற்றி குவித்து வைத்திருந்தார். அதில் திடீரென்று தீ பிடித்தது. அடுத்த கணம் காட்டுத்தீ போல் பரவி மளமளவென்று எரிந்தது கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் . விரைந்து வந்து அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.
நெருப்பு இன்றி மனிதன் வாழ முடியுமா! என்று பார்த்தால் நிச்சயமாக முடியாது. ஒளி இல்லாத இருண்ட உலகம் போன்று வாழ்க்கை அமைந்துவிடும். ஆனால் அதே பயனுள்ள நெருப்பு , சில சமயம் வான் போல் எழுந்து உயிரையும் பலிவாங்கும் சம்பவங்கள் நிகழத்தான் செய்கின்றன. ஆனால் வள்ளியூரில் எழுந்த காட்டுத்தீ நல்ல வேளையாக உயிர்சேதம் இன்றி அணைக்கப்பட்டது.
மர்ம நபர்களின் வேலையா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.