Logo of Tirunelveli Today

வைகாசி விசாகம் முருகனுக்கு தீபாராதனை திருவிழா

June 13, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

முருகப்பெருமான் வைகாசி விசாகத்தில் பிறந்ததற்கு மிக அழகான காரணமுண்டு .

இறைவனுடைய கருணை அறக்கருணை , மறக்கருணை என இருவகைப்படும்.

ஒரு பாவமும் செய்யாது
நல்ல மனம் படைத்தவர்களை தூய்மையான குணம் கொண்டவர்களை இறைவன் தம் அறகருணையால் ஆட்கொள்கின்றான்.

ஆணவம் கொண்டவன்
ஒருபொழுதும் இறைவனை காண முடியாது ..ஆணவத்தை ஒடுக்குபவன் இறைவன் ஒருவனே . அதனால்தான் ஆணவம் கொண்ட சூரனை
தம்முடைய வேலாயுதத்தால் ஆட்கொண்டு உடலினை இரு கூறாக்கி
ஒரு கூறு மயிலாகவும் , மற்றொன்று சேவலாகவும் மாற்றி தம்மோடு சேர்த்து
காட்சி தருகின்றான். முருகபெருமான் செய்த இந்த செயல் மறக்கருணை என்பதாகும்.

சூரசம்ஹாரம் தத்துவத்தை எடுத்துக்காட்டவே எம்பெருமான் அவதாரம் எடுக்கிறார். அவதாரம் எடுத்த தினம் நேற்றைய தினம் என்பதால் அனைத்து முருகன் கோவில்களிலும் மிகப்பெரிய விழாவாக வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது.

பாளையங்கோட்டை மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவில் நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில், பாளையஞ்சாலை குமார சுவாமி கோவில் உள்பட பல முருகன் கோவில்களில் சிறப்பான ஹோம பூஜைகள் ,கண்களுக்கு குளிர்ச்சி தரும் தீபாராதனை , மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

நெல்லை சந்திப்பு சாலை குமாரசாமி கோவிலில் சங்காபிஷேகம் மற்றும் யாகம் நடக்க ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பூஜையில் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் நேற்று இயக்கப்பட்டது. அதேபோல வைகாசி வைசாசி திருவிழாவையொட்டி பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து கிரிவலப்பாதை ஊர்வலமாக வருவது என வள்ளியூர் முருகன் கோவிலில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சுவாமிக்கு பால் அபிஷேகம் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் சிறப்பு அலங்காரம் தீபாராதனை பூஜை சிறப்பாக நடந்தது.

வைகாசி விசாக விழா மற்றும் வருஷாபிஷேக விழா பாலசுப்ரமணிய சுவாமி கோவில் சேரன்மாதேவி பிரதான சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் நடைபெற்றது

5 மணிக்கு விழாவையொட்டி நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், சிறப்பு தீபாராதனைகள் உற்சவர் உலா அனைத்தும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

வீரநல்லூர் அருகே அத்தாளநல்லூரிலிருந்து திருப்புடைமருதூர் செல்லும் வழியில் விசாக கட்டளை மடம் இணைந்த பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் சிறப்பு தீபாராதனை மற்றும் திருவீதி உலா நடைபெற்றது தொடர்ந்து அன்னதானம் நடந்தது . இதில் திரளான பக்தர்கள் கலந்து ஒன்று சுவாமி தரிசனம் செய்தனர்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify