Logo of Tirunelveli Today

சிவநாமம் பாடி சிந்தை மகிழும் விழாவாய் கைலாசநாதர் கோவிலில் வைகாசி திருவிழா ஆரம்பம்

May 31, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • திருநெல்வேலி சந்திப்பு அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
  • தினமும் காலை மாலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் கோவில் நிர்வாகிகள் ஏற்பாடு

சிவன் இடத்தில் சிந்தைதனை நிறுத்த வேண்டும் . அவன் பார்வை நம் மீது படவேண்டும் . பாவ கணக்கு கரைந்து புண்ணிய பலன்கள் யாவும் நாம் பெற வேண்டும்.

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்!

வாழ்வில் 'ஓம் நமச்சிவாயா ' எனும் நாமம் தனை நாம் மொழிந்து , புண்ணியங்கள் கூடி சீரும் சிறப்புமாய் வாழ்வதற்கு நம்மால் முடிந்த பல திருத்தலங்கள் சென்று திருப்பணிகள் செய்து சிவ தரிசனம் காண வேண்டும். அப்படிப்பட்ட சிறப்பான திருத்தலம்தான் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் திருக்கோவில்.

கைலாசபுரத்தில் தாமிரபரணி கரையோரம் கைலாச நாதர் திருக்கோவிலில் வருடந்தோறும் வைகாசி திருவிழா மிக சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டும் திருவிழாவையொட்டி திங்கட்கிழமை காலையில் சுவாமி அம்பாளுக்கு மங்களம் தரும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன .

அதன் பின்னர் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகாதீபாரதனை நடத்த பெற்றது. நமச்சிவாயா எனும் முழக்கத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர்.

விழா நாளில் தினமும் காலை மாலை சிறப்பு வழிபாடுகள் திருவீதி உலா குறித்த விவரங்கள்!

ஜூன் 2 ஆம் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் வீதி உலா

5ஆம் தேதி - நடராஜர் சிவப்பு சாத்தி வெள்ளை சாத்தி சப்பர புறப்பாடு

ஜூன் 7ஆம் தேதி காலை தேரோட்டம்

ஜூன் 8ஆம் தேதி - கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி விழா என கோவில் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify