Logo of Tirunelveli Today

பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்!

March 18, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • 12 - 14 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி.
  • திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முதல் துவங்கியது.

    திருநெல்வேலி மாவட்டத்தில் 12 - 14 வயதிற்குட்பட்ட சிறுவர் - சிறுமியர்களுக்கு அரசு அறிவித்துள்ளபடி நேற்று முதல் "கோர்பவேக்ஸ்" தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கியது.

    திருநெல்வேலி சந்திப்பு - மீனாட்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று இந்த தடுப்பூசி போடும் நிகழ்ச்சியை சட்டப்பேரவை உறுப்பினர் திரு. அப்துல்வகாப் அவர்கள் துவக்கி வைத்தார்.

    மாவட்டம் முழுவதும் மொத்தம் 48 ஆயிரத்து 400 சிறுவர் சிறுமியர் இந்த தடுப்பூசி போடுவதற்கு தகுதி உடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் தொடர்ந்து இந்த தடுப்பூசிகளை மாணவர்களுக்கு செலுத்திட மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாரத்துறை ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    இதுகுறித்து மாநகர நல அலுவலர் மருத்துவர் திரு.ராஜேந்திரன் அவர்கள், அரசு உத்தரவுபடி சிறுவர் - சிறுமியர்கள் அனைவருக்கும் ஒரு வாரத்திற்குள்ளாக தடுப்பூசி செலுத்தி முடிக்கும் பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

    Image source: maalaimalar.com

    செய்தி ஆசிரியர்

    பாலாக்ஷிதா

    லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

    வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
    தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

    தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

    "இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

    இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

    அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    எம்மில் தேடுக
    இன்றைய பதிவுகள்

    இதையும் படிக்கலாமே..

    உதவிக்கு அழைக்க
    • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
    • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
    • போக்குவரத்து காவல்துறை : 103
    • மருத்துவ உதவி எண் : 104
    • தீயணைப்பு துறை : 101
    • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
    • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
    • குழந்தைகள் நலம் : 1098
    • பாலியல் துன்புறுத்தல் : 1091
    • ரயில்வே உதவி எண் : 1512
    TIRUNELVELI WEATHER
    Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
    Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify