Logo of Tirunelveli Today

திருநெல்வேலியில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்!

March 14, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • திருநெல்வேலி மாநகரில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
  • முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகள் போடப்பட்டது.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணுசந்திரன் அவர்கள் உத்தரவின்படியும், மாநகர நல அலுவலர் திரு.ராஜேந்திரன் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகர பகுதியில் மொத்தம் 74 இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம் மூலம் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இரண்டு தவணை முடிந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதுதவிர திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட இடங்களிலும் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

Image source: maalaimalar.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify