செய்திக்குறிப்புகள்:
- திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் உழாவாரப்பணி.
- திரளான பக்தர்கள் பங்கு பெற்று கோவிலை சுத்தம் செய்தனர்.
"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி" என்று சம்மந்தர் வாக்கில் பாடப்பெற்ற திருநெல்வேலி காந்திமதி அம்மை உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் நாளை (01/03/2022) மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ள நிலையில் நேற்று உழவாரப்பணி நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள், சிவநெறி தொண்டர்கள், பக்தர்கள் பேரவையினர் கலந்து கொண்டு திருக்கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபம், பொற்றாமரைக் குளம், சுவாமி சன்னதி பிரகாரம், அம்மன் சன்னதி பிரகாரம் ஆகியவற்றை தூய்மை செய்தும், திருக்கோவிலில் பயன்படுத்தப்படும் விளக்குகள், தாம்பாளங்கள், தீபாராதனை தட்டுகள் மற்றும் பிற பூஜை பொருட்களை கழுவியும், கோவிலில் உள்ள தூண்கள், சிற்பங்கள் ஆகியவற்றில் கொட்டப்பட்டிருந்த விபூதி, குங்கும பிரசாதத்தை துடைத்தும், எண்ணெய் பிசுக்குகளை சுத்தம் செய்தும் உழவாரப்பணிகளை மேற்கொண்டனர்.
Image source: dailythanthi.com

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.