Logo of Tirunelveli Today

தென்காசி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆயத்த பணிகள்!

January 27, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

தென்காசி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் 440 வார்டுகளில் உள்ளாட்சி தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி மாவட்டத்தில் உள்ள தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, புளியங்குடி, சங்கரன்கோவில் மற்றும் புதிதாக நகராட்சி அந்தஸ்து பெற்ற சுரண்டை ஆகிய 6 நகராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தென்காசியில் 33 வார்டுகளும், கடையநல்லூரில் 33 வார்டுகளும், புளியங்குடியில் 33 வார்டுகளும், சங்கரன்கோவிலில் 30 வார்டுகளும், செங்கோட்டையில் 24 வார்டுகளும், சுரண்டையில் 27 வார்டுகளும் உள்ளன. மொத்தமாக இந்த நகராட்சிகளில் இருந்து 180 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது போல இந்த மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகளிலும் தேர்தல் மூலம் 260 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரும், தேர்தல் அலுவலருமான கோபால சுந்தரராஜ் அவர்கள் தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify