செய்திக் குறிப்புகள் :
- நெல்லையில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் இருந்து சைக்கிள் ஊர்வலம் தொடங்கியது.
- நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு கொடியேற்றி துவக்கி வைப்பு
இன்று இருக்கும் விஞ்ஞான முன்னேற்றம் என்பது .. யமஹாபைக்கில் அதிசாகசம் புரிந்தாலும், சொகுசு காரில் உல்லாசமாய் பறந்தாலும், அந்தரத்தில் விமான அனுபவம் கிடைத்தாலும் ஆதிகால சைக்கிளில் ஆனந்தமாய் ஓட்டுகின்ற சுகம் என்பது தனிதான்
என்பதை வலியுறுத்தும் வகையில்…கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் தொடங்கி பாபநாசம் வரை உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. இதனை கலெக்டர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார் .
'தூய பொருநை நெல்லைக்கு பெருமை' என்று வலியுறுத்தி நடைபெற்ற ஊர்வலத்தில் புஷ்பலதா பள்ளி, முத்தமிழ் பள்ளி மற்றும் ஜே.ஏ.எம்.எஸ் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் நெல்லை நேட்சர் கிளப், நெல்லை பை சைக்கிள், செஞ்சிலுவை சங்கம் , ஏசி ஏ ட்ரீ, நெல்ல நீர் வளம் உள்ளிட்ட சமூக அமைப்புகளில் 400 பேருக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்
இது தவிர நெல்லை மாவட்டத்தில் கோடகநல்லூர், பள்ளக்கால் ஆகிய கிராமங்களில் உள்ள கோவில்களில் நந்தவனம் அமைக்கும் பணி,
வீரவநல்லூர் பேரூராட்சி அம்பை ஈரோட்டில் தட்டப்பாறை கரையில் 15-வது நிதிக்குழு 1,100 மரக்கன்றுகள் நடும் பணி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் என பலவும் நடைபெற்றன
நெல்லை நீர்வள திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை சீரமைக்கும் பணியில் முதல் கட்டமாக 80க்கும் மேற்பட்ட குளங்கள் தூர்வாரப்பட்டு, பாசன வசதிகள் செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது ' என்று கலெக்டர் தெரிவித்தார்.
தாமிரபரணி தண்ணீரை குடிநீராக மாற்ற வேண்டும்.
விக்ரமசிங்கபுரம் தாய்சினி தியேட்டரில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க வேண்டும்.
அழிந்து வரும் சிட்டுக் குருவிகளை பாதுகாக்க வேண்டும் என்றும் கலெக்டர் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டு, குருவிகள் தங்குவதற்கான கூண்டுகளை கலெக்டர் வழங்கினார்.
மேலசெவன் சிவன் கோவில் எதிரே அமைந்துள்ள தெப்பக்குளத்தில் நெல்லை உழவாரப்பணி குழுவினர் செய்து வரும் தூர்வாரும் பணியை கலெக்டர் நேரில் பார்வையிட்டார்
நிகழ்ச்சிகளில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷாத், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாகிர் அபுபக்கர் தாசில்தார்கள் செல்வன்( பேரிடர் மேலாண்மை) சண்முக சுப்பிரமணியன், பாலசுப்ரமணியன், ஆனந்தகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரன், பாலசுப்ரமணியன், விக்ரமசிங்க நகராட்சி ஆணையாளர் கண்மணி, பேரூராட்சி நிர்வாக அலுவலர்கள் சத்திய தாஸ், லோபாமுத்திரை ,மாலதி, இந்து சமய அறநிலையத் கோவில் நிர்வாக அலுவலகர்கள் கிருஷ்ணவேணி முருகன் ,வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் சித்ரா, பஞ்சாயத்து தலைவர்கள் ராமச்சந்துரு, பாலசுப்பிரமணியன் மற்றும் யோக் அமைப்பு, நம் தாமிரபரணி உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.