Logo of Tirunelveli Today

உலகச் சுற்றுச்சூழல் தினத்தில் உற்சாகமாய் ஒருங்கிணைந்த சைக்கிள் ஊர்வலம்

June 6, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக் குறிப்புகள் :

  • நெல்லையில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் இருந்து சைக்கிள் ஊர்வலம் தொடங்கியது.
  • நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு கொடியேற்றி துவக்கி வைப்பு

இன்று இருக்கும் ‌விஞ்ஞான முன்னேற்றம் என்பது .‌‌. யமஹாபைக்கில் அதிசாகசம் புரிந்தாலும், சொகுசு காரில் உல்லாசமாய் பறந்தாலும், அந்தரத்தில் விமான‌ அனுபவம் கிடைத்தாலும் ஆதிகால சைக்கிளில் ஆனந்தமாய் ஓட்டுகின்ற சுகம் என்பது தனிதான்

என்பதை வலியுறுத்தும் வகையில்…கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் தொடங்கி பாபநாசம் வரை உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. இதனை கலெக்டர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார் .

'தூய பொருநை நெல்லைக்கு பெருமை' என்று வலியுறுத்தி நடைபெற்ற ஊர்வலத்தில் புஷ்பலதா பள்ளி, முத்தமிழ் பள்ளி மற்றும் ஜே.ஏ.எம்‌.எஸ் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் நெல்லை நேட்சர் கிளப், நெல்லை பை சைக்கிள், செஞ்சிலுவை சங்கம் , ஏசி ஏ ட்ரீ, நெல்ல நீர் வளம் உள்ளிட்ட சமூக அமைப்புகளில் 400 பேருக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

இது தவிர நெல்லை மாவட்டத்தில் கோடகநல்லூர், பள்ளக்கால் ஆகிய கிராமங்களில் உள்ள கோவில்களில் நந்தவனம் அமைக்கும் பணி,

வீரவநல்லூர் பேரூராட்சி அம்பை ஈரோட்டில் தட்டப்பாறை கரையில் 15-வது நிதிக்குழு 1,100 மரக்கன்றுகள் நடும் பணி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் என பலவும் நடைபெற்றன

நெல்லை நீர்வள திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை சீரமைக்கும் பணியில் முதல் கட்டமாக 80க்கும் மேற்பட்ட குளங்கள் தூர்வாரப்பட்டு, பாசன வசதிகள் செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது ' என்று கலெக்டர் தெரிவித்தார்.

தாமிரபரணி தண்ணீரை குடிநீராக மாற்ற வேண்டும்.

விக்ரமசிங்கபுரம் தாய்சினி தியேட்டரில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க வேண்டும்.

அழிந்து வரும் சிட்டுக் குருவிகளை பாதுகாக்க வேண்டும் என்றும் கலெக்டர் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டு, குருவிகள் தங்குவதற்கான கூண்டுகளை கலெக்டர் வழங்கினார்.

மேலசெவன் சிவன் கோவில் எதிரே அமைந்துள்ள தெப்பக்குளத்தில் நெல்லை உழவாரப்பணி குழுவினர் செய்து வரும் தூர்வாரும் பணியை கலெக்டர் நேரில் பார்வையிட்டார்

நிகழ்ச்சிகளில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷாத், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாகிர் அபுபக்கர் தாசில்தார்கள் செல்வன்( பேரிடர் மேலாண்மை) சண்முக சுப்பிரமணியன், பாலசுப்ரமணியன், ஆனந்தகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரன், பாலசுப்ரமணியன், விக்ரமசிங்க நகராட்சி ஆணையாளர் கண்மணி, பேரூராட்சி நிர்வாக அலுவலர்கள் சத்திய தாஸ், லோபாமுத்திரை ,மாலதி, இந்து சமய அறநிலையத் கோவில் நிர்வாக அலுவலகர்கள் கிருஷ்ணவேணி முருகன் ,வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் சித்ரா, பஞ்சாயத்து தலைவர்கள் ராமச்சந்துரு, பாலசுப்பிரமணியன் மற்றும் யோக் அமைப்பு, நம் தாமிரபரணி உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify