Logo of Tirunelveli Today

'உலக புகையிலை ஒழிப்பு தினம்' வருமுன் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

June 1, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்தி குறிப்புகள் :

  • மே 31ஆம் தேதி அன்று உலகம் முழுதும் புகையிலை ஒழிப்பு தினம் .
  • மது போதை பழக்கத்தால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு முகாம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

மது போதை என்பது முதலில் மனதை கொல்லும். அடுத்து மானம் மரியாதை அனைத்தையும் கொன்று முடிவில் உடலையே கொல்லும். அதை அறியாது சில இளம் தளிர்கள் முள்ளில் சிக்குண்ட நிலை போன்று போதையில் அடிமையாகி தவிக்கின்றனர் .

அப்படி தவிப்பவர்களுக்கும் , வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் அதில் மாணவர்கள் அடிமையாகாமல் தடுப்பதற்கும் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் மது போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய் கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார் உத்தரவின் பேரில் மாநகர கிழக்கு காவல் துணைய ஆணையர் டி பி சுரேஷ்குமார் மேற்பார்வையில் நடைபெற்றது.

மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார் . பேராசிரியர்கள் , ஏராளமான மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

மது போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவர்களிடையே எடுத்துரைக்கப்பட்டது

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify