செய்தி குறிப்புகள் :
- மே 31ஆம் தேதி அன்று உலகம் முழுதும் புகையிலை ஒழிப்பு தினம் .
- மது போதை பழக்கத்தால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு முகாம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
மது போதை என்பது முதலில் மனதை கொல்லும். அடுத்து மானம் மரியாதை அனைத்தையும் கொன்று முடிவில் உடலையே கொல்லும். அதை அறியாது சில இளம் தளிர்கள் முள்ளில் சிக்குண்ட நிலை போன்று போதையில் அடிமையாகி தவிக்கின்றனர் .
அப்படி தவிப்பவர்களுக்கும் , வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் அதில் மாணவர்கள் அடிமையாகாமல் தடுப்பதற்கும் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் மது போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய் கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார் உத்தரவின் பேரில் மாநகர கிழக்கு காவல் துணைய ஆணையர் டி பி சுரேஷ்குமார் மேற்பார்வையில் நடைபெற்றது.
மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார் . பேராசிரியர்கள் , ஏராளமான மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
மது போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவர்களிடையே எடுத்துரைக்கப்பட்டது