Logo of Tirunelveli Today

திருநங்கைகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு

July 6, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திருநங்கைகள் குறைதீர்க்கும் கூட்டம்
  • நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார்

திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 2020 பிரிவு 101-ன் படி, “திருநங்கைகளின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்கவும், அரசால் உருவாக்கப்படும் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களைப் பெற உதவும் வகையிலும், சம்பந்தப்பட்ட அரசு திருநங்கைகள் நல வாரியத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்”.

திருநங்கைகளின் நலனுக்காக விரிவான மறுவாழ்வுக்கான துணைத் திட்டங்கள் உட்பட “SMILE - Support for Marginalized Individuals for Livelihood and Enterprise”, என்ற திட்டங்கள் என திருநங்கைகளுக்காக அரசு பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. அது மட்டும் இல்லாது, இப்பொழுது புதிய முயற்சி ஆக திருநங்கைகளுக்கு பயனளிக்கும் வகையில் கலெக்டர் விஷ்ணு தகவல் ஒன்று தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் திருநங்கைகள் குறைதீர்க்கும் கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் முதன்முறையாக நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி உரையாற்றினார் அப்பொழுது அவர் பேசியதாவது…

நெல்லையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திருநங்கைகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார். சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகிக்க கூட்டத்தில் திருநங்கைகள் கலந்து கொண்டு பேசினர்.

நரசிங்கநல்லூர் திருநங்கைகள் குடியிருப்புக்கு சாலை குடிநீர் வசதி, பாதுகாப்பு கண்காணிப்பு கேமரா பொருத்துதல் என கோரிக்கைகளை திருமங்கைகள் முன் வைத்தனர். ‌

வள்ளியூரில் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட 36 பட்டாக்களிலும் வீடுகள் கட்டி தர ஏற்பாடு மற்றும் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்தல்,
ஊர்க்காவல் படையில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு அளித்தல் என மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர் .

கூட்டத்தில் 96 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள், ஒருவருக்கு தையல் இயந்திரம், குரூப்- 4 பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify