- அரசு அலுவலர்களுக்கான நேர்முக பயிற்சி வகுப்பு.
- திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் துவங்கியது.
தமிழக அரசின் உத்தரவுப்படி அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ஒவ்வொரு மாவட்டத்திலும் துவங்கப்பட்டு வருகிறது. இதில் 25-வது அணியாக திருநெல்வேலி மாவட்ட அரசு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று முதல் துவங்கியுள்ளது.
திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தொடங்கியுள்ள இந்த பயிற்சி வகுப்பானது ஏப்ரல் மாதம் 25ம் தேதி வரை 37 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் நேற்று பவானிசாகர் அரசு அலுவலர்கள் பயிற்சி கல்லூரி முதல்வர் கலந்து கொண்டு பயிற்சி குறித்து விளக்கம் அளித்தார்.
இந்த பயிற்சி வகுப்பில் பங்குபெற்று தேர்ச்சி அடைந்தால் மட்டுமே அரசு அலுவலர்களுக்கான தகுதி காண் பருவம் நிறைவு பெற்று பதவி உயர்வு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Image source: Image Source: Careers360.com