செய்திக்குறிப்புகள்:
- நெல்லை சேரன் மகாதேவியில் இல்லம் தேடி கல்வி கொடுக்கும் தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
- 1முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு இந்த கல்வி திட்டத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தன்னார்வலர்கள் பயிற்சி முகாம் சேரன்மகாதேவியில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
1முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு சேரன்மகாதேவி வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் மாலை நேரத்தில் இல்லம் தேடி கல்வி அளிக்கும் திட்டத்தை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 187 தன்னார்வலர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் சேரன் மகாதேவி ஒன்றியத்தில் கற்பித்தல் பணி செவ்வனே செய்து வருகின்றனர் . இந்த திட்டத்திற்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் இல்லம் தேடி வரும் கல்வி திட்டத்தில் பயிற்றுவிக்கும் தன்னார்வலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
சேரன்மகாதேவி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் சிவராஜ் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாம், இரண்டு கட்டமாக பிரித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி எடுக்கப்பட்டது.
பயிற்சி முகாமை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பென்னட் ராஜ் அவர்கள் நடத்தினார் . மேலும் வட்டார கல்வி அலுவலர்கள் உமா மகேஸ்வரி கீதா மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் இந்த பயிற்சியை கொடுத்தனர். பள்ளி தலைமை ஆசிரியை மரகதவல்லி ஆசிரியர் பயிற்றுநர்கள் சங்கர் துரை பாஸ்கரன் சந்திர சுப்ரமணியன் அசோக் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் ஒருங்கிணைப்பாளர் நம்பிராஜன் இதற்கான ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக செய்திருந்தார்.