Logo of Tirunelveli Today

நெல்லையில் சேரன்மகாதேவியில் தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம்

August 29, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை சேரன் மகாதேவியில் இல்லம் தேடி கல்வி கொடுக்கும் தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
  • 1முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு இந்த கல்வி திட்டத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் தன்னார்வலர்கள் பயிற்சி முகாம் சேரன்மகாதேவியில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது

1முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு சேரன்மகாதேவி வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் மாலை நேரத்தில் இல்லம் தேடி கல்வி அளிக்கும் திட்டத்தை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 187 தன்னார்வலர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் சேரன் மகாதேவி ஒன்றியத்தில் கற்பித்தல் பணி செவ்வனே செய்து வருகின்றனர் . இந்த திட்டத்திற்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் இல்லம் தேடி வரும் கல்வி திட்டத்தில் பயிற்றுவிக்கும் தன்னார்வலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

சேரன்மகாதேவி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் சிவராஜ் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாம், இரண்டு கட்டமாக பிரித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி எடுக்கப்பட்டது.

பயிற்சி முகாமை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பென்னட் ராஜ் அவர்கள் நடத்தினார் . மேலும் வட்டார கல்வி அலுவலர்கள் உமா மகேஸ்வரி கீதா மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் இந்த பயிற்சியை கொடுத்தனர். பள்ளி தலைமை ஆசிரியை மரகதவல்லி ஆசிரியர் பயிற்றுநர்கள் சங்கர் துரை பாஸ்கரன் சந்திர சுப்ரமணியன் அசோக் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் ஒருங்கிணைப்பாளர் நம்பிராஜன் இதற்கான ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக செய்திருந்தார்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify