Logo of Tirunelveli Today

மின் சிக்கன விழிப்புணர்வு பற்றிய ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

July 21, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை மாவட்டம் மின் சிக்கனம் அவசியம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் மேற்பார்வை பொறியாளர் ராஜன் ராஜ் தொடங்கி வைப்பு.
  • மாணவர்களுக்கு மின்சார சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி எடுக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் மாணவர்களுக்கு மின்சார சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு அவசியம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நேற்று நடந்தது

தமிழகத்தில் மின்சாரம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மின் சிக்கனத்தின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

இதற்காக திறன் மேம்பாட்டு குழு என்ற பெயரில் , ஒவ்வொரு பள்ளிகளுக்கும் குழு ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றது . அதன் ஒரு பகுதியாக நெல்லை தென்காசி மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி என அந்தந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர.

மாணவ மாணவியருக்கு மின் சிக்கனத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம். நெல்லை மாவட்டத்தில் 30 பள்ளிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் 20 பள்ளிகள் முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி வகுப்பினை மேற்பார்வை பொறியாளர் ராஜன்ராஜ் குத்து விளக்கு ஏற்றில் தொடங்கி வைக்க.‌.மின்வாரிய அதிகாரிகள் சார்பில் நெல்லையில் நேற்று பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.

அப்பொழுது அவர் கூறியதாவது;
மின்சார சிக்கனம் பற்றிய மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லை தென்காசி மாவட்டத்தில் எனர்ஜி கிளப் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 60 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

இந்த ஆசிரியர்களுக்கு மின் சிக்கனம் குறித்த பயிற்சி வகுப்பு நடக்கிறது.இவர்கள் மாணவ மாணவிகளை சேர்த்து மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு அவர்களுக்குள் ஏற்படுத்தி, அவர்கள் மூலம் மக்களுக்கும் மின் சிக்கனம் பற்றி அறிய செய்வது என்பது எனர்ஜி கிளப்பின் நோக்கம் என்று கூறினார்.

60 ஆசிரியர்கள் மற்றும் மின் பொறியாளர்கள் பணியாளர்கள் கலந்து கொண்ட இந்த ஒரு நாள் பயிற்சியில் இந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள் சைலஜா, அமுத்துசாமி மற்றும் செயற்பொறியாளர் வெங்கடேஷ் மணி ஆகியோர் கலந்து கொண்டு மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பற்றி பேசினார்கள்.

மின்சிக்கன விழிப்புணர்வு குறித்து, அரசு எடுத்திருக்கும் மிகவும் பயனுள்ள இந்த முயற்சி வெற்றிகரமான முறையில் அமைய வேண்டும் என்று திருநெல்வேலி டுடே தன் சார்பாக வாழ்த்து தெரிவிக்கின்றது.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify