தமிழர் திருநாள் என்று சிறப்பிக்கப்படும் பொங்கல் திருநாளை ஒட்டி கிராமங்களில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் கடந்த 14/01/2022 அன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்ட நிலையில்., திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு - புதுத்தெரு கிராமத்தில் பாரம்பரிய பொங்கல் விளையாட்டு போட்டிகள் விமரிசையாக நடைபெற்றது. இதில் சிறுவர், சிறுமியர், இளைஞர்கள், பெண்கள் உட்பட அனைவரும் பங்குபெற்று இளவட்ட கல் தூக்குதல், உரல் தூக்குதல், கயிறு இழுத்தல், சைக்கிள் ஓட்டுதல், சாக்குப்பை அணிந்து ஓடுதல், வழுக்கு மரம் ஏறுதல் உட்பட பல பாரம்பரிய விளையாட்டுகளில் ஆர்வமுடன் பங்குபெற்றனர். இந்த பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.