Logo of Tirunelveli Today

அகஸ்தியர் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

July 18, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • திருநெல்வேலி விக்ரமசிங்கபுரம் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் நேற்று குவிந்தனர்.
  • தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் விக்ரமசிங்கபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவி , மேற்கு தொடர்ச்சி மலையில் ஒட்டிய புகழ்பெற்ற இடம் ஆகும்.

அந்த அகஸ்தியர் அருவியில் நேற்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அவர்கள் தங்கள் குடும்பத்தினரோடு குளித்தும் மகிழ்ந்தனர்.

இந்த வருடம் முழுவதும் தண்ணீர் நிலை அதிகரித்து அதிகமாய் அருவி தண்ணீர் கொட்டுகின்றது. அப்படி அருவி கொட்டுவதால் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்கள் , வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுப்பயணிகள் அந்த இடத்தை சுற்றுலா தலமாக வந்து கண்டு களித்து குடும்பத்தினரோடு சேர்ந்து குளித்து மகிழ்கிறார்கள்

விடுமுறை நாள் நேற்று என்பதால் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளின் போக்குவரத்து அதிகமாக இருந்தது. .

பாபநாசம் வனத்துறை சோதனை சாவடியில் அனைத்து வாகனமும் வனத்துறையினரால் சோதனை நடத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டது. வாழ்க்கையில் மகிழ்ச்சியை கண்டு களிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தில் வருகை புரிந்து மகிழ்ந்தனர்.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify