- மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
- சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் விதித்த தடை விலக்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் அகஸ்தியர் அருவிகளில் வருடம் தோறும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குடும்பத்தோடு வந்திருந்து குளித்து மகிழ்வர்..
அதுபோலவே திருநெல்வேலி அம்பை மாவட்டம் தென் மாவட்டங்களில் உள்ள மிகவும் புகழ்பெற்ற அருவியாக பிரசித்தி பெற்ற மணிமுத்தாறு அருவியும் விளங்குகிறது. ஆண்டுதோறும் இந்த அருவியிலும் தண்ணீர் விழுவது வழக்கம்.
சில நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் மழை பெய்ததன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் மக்கள், தென்காசி தூத்துக்குடி மாவட்ட மக்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஆனந்தமாக மணிமுத்தாறு அருவியில் குளித்து மகிழ்ந்து வந்த இந்த சூழ்நிலையில் ,கடந்த 15ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினரால் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மலைப்பகுதியில் மழை குறைந்தது காரணமாக மணிமுத்தாற்றில் தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது.
இதனால் செவ்வாய்க்கிழமை முதல் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Image source: dailythanthi.com