உலக செவிலியர் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றில் செவிலியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான மே மாதம் 12ஆம் தேதி உலக செவிலியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த ஆண்டுக்கான உலக செவிலியர் தினம் நேற்று மருத்துவமனை வளாகத்துக்குள் எளிமையாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் செவிலியர்கள் அனைவரும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படம் முன்பு நின்று, நாங்கள் தன்னலம் கருதாமல், மக்கள் சேவைக்காக பணியாற்றுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்களப்பணியாளர்களாகத் தற்போதைய சூழ்நிலையில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கு சேவை புரிந்து வரும் செவிலியர்களுக்கு நேற்று பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ந்தார்கள்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.