Logo of Tirunelveli Today

திருநெல்வேலியில் தாமரை மலர்ந்து விட்டது.!!

May 3, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் 2 லட்சத்து 92 ஆயிரத்து 8 வாக்காளர்கள் உள்ள திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கும் கடந்த மாதம்  6-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 496 வாக்குகள் பதிவாகின. இந்த தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதா  சார்பில் நயினார் நாகேந்திரன், தி.மு.க. சார்பில் லட்சுமணன், அ.ம.மு.க. சார்பில் மகேஷ் கண்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யா உட்பட 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியது. தமிழகத்தில் தி.மு.க பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. திருநெல்வேலி தொகுதியில் பதிவான வாக்குகள், அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டன. இந்த வாக்கு எண்ணிக்கையின் போது நேற்று முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட திரு.நயினார் நாகேந்திரன் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வந்தார். நேற்று அறிவிக்கப்பட்ட  இறுதி  முடிவின் படி 92 ஆயிரத்து 282 வாக்குகள் பெற்று அவர் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முந்தைய திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும்,  தி.மு.க. வேட்பாளருமான லட்சுமணனுக்கு 69 ஆயிரத்து 175 வாக்குகள் கிடைத்தன. இதன் மூலம் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியை முதன்முறையாக பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே இந்த தொகுதியில் அ.தி.மு.க சார்பில் முந்தைய ஆண்டுகளில் போட்டியிட்டு திரு.நயினார் நாகேந்திரன் அவர்கள் வெற்றி பெற்று, அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும், போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify