கொரோனா நோய் தற்போது தீவிரமாக பரவி வரும் நிலையில், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் என்னும் மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. வெளிச்சந்தையில் இந்த மருந்துக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு இந்த மருந்து செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள முக்கியமான அரசு மருத்துவமனைகள் மூலம் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியில் உள்ள ஹைகிரவுண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இந்த மருந்து விற்பனை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்டது.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு இந்த மருந்து தேவைப்படும் நிலையில், தேவையான ஆதாரங்களை காட்டி அவர்கள் உறவினர்கள் இந்த மருந்தை வாங்கி செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்ட மக்களும் தங்களுக்கு தேவையான மருந்தினை வாங்க திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் குவிந்து வருகின்றனர்.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.