Logo of Tirunelveli Today

திருநெல்வேலியில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்காகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.

May 10, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக இன்று முதல் இரண்டு வாரங்களுக்குத் தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான தனியார், அரசுப் பேருந்துகள் இயக்கம் மற்றும் தனியார் வாடகை வாகனங்களின் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முக்கியமான அரசு அலுவலகங்கள் குறைந்த அளவு ஊழியர்களைக் கொண்டு இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், திருநெல்வேலி மாநகர பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் ஆகியவற்றில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்காக அருகில் உள்ள  முக்கிய நகரங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியுள்ளார். 

இதன்படி தென்காசி - திருநெல்வேலி, சங்கரன்கோவில் - திருநெல்வேலி, கோவில்பட்டி - திருநெல்வேலி, தூத்துக்குடி - திருநெல்வேலி, பாபநாசம், அம்பாசமுத்திரம்  - திருநெல்வேலி, நாகர்கோவில் - திருநெல்வேலி, ராதாபுரம் - திருநெல்வேலி, காவல்கிணறு - திருநெல்வேலி, திசையன்விளை - திருநெல்வேலி, திருச்செந்தூர் - திருநெல்வேலி ஆகிய வழித்தடங்களில் காலையும், மாலையும் அலுவலகத்திற்கு ஊழியர்கள் வந்து செல்லும் வகையில் இரண்டு முறை மேற்கண்ட வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இந்தப் பேருந்துகளில் அரசு அலுவலங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்கள் அடையாள அட்டையைக் காண்பித்து பயணம் செய்து கொள்ளலாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify