Logo of Tirunelveli Today

திருநெல்வேலியில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.

May 26, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

தமிழக அரசு சார்பில் கொரோனா நோயை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்களின் ஆலோசனைப்படி நேற்று தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. மாநகரில் நேற்று அரசு அலுவலர் குடியிருப்பில் உள்ள சொசைட்டி திருமண மண்டபம், பாளையங்கோட்டை அருண்ஸ் மஹால் திருமண மண்டபம், வ.உ.சி மைதானம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் பதினெட்டு வயது நிரம்பிய இளம் வயதினர் முதல் அனைவரும் வந்து ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு விஜயநாராயணத்தில் நேற்று 18 முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று நடைபெற்றது. வடக்கு விஜயநாராயணம் சிவன் கோவிலில் வைத்து நடைபெற்ற இந்த தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. விஷ்ணு அவர்கள் துவக்கி வைத்து, தற்போது நகர பகுதிகளில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் கிராம பகுதிகளில் தொற்று அதிக அளவு காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும். தடுப்பூசி போட்டால் தான் கொரோனா தொற்றில் இருந்து நம்மைக் காப்பாற்ற முடியும் என்று உரையாற்றினார்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify