Logo of Tirunelveli Today

திருநெல்வேலி வழியாக செல்லும் நாகர்கோவில் - சென்னை அந்தியோதயா ரயில் இன்று முதல் இயக்கம்!

July 2, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

பொதுமக்களின் பயன்பாட்டைக் கருதி சென்னை - தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி வரை அந்தியோதயா ரயில் சேவை துவக்கப்பட்டது. மற்ற ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்ய வேண்டிய நிலையில், அந்தியோதயா ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்ய வேண்டியதில்லை என்பதால் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் திருநெல்வேலி வரை இயக்கப்பட்ட அந்தியோதயா ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

பின்னர் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஓராண்டாக இந்திய முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக சென்னை (தாம்பரம்) - நாகர்கோவில் வழித்தடத்தில், திருநெல்வேலி வழியாக இயக்கப்பட்ட அந்தியோதயா ரயிலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது நோய்த்தொற்று குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பேருந்து சேவைகள் துவங்கப்பட்டுள்ள நிலையில், அந்தியோதயா ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது. இதன்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த ரயில், மாலை 5.05 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்தடைந்து இங்கிருந்து புறப்பட்டு நாளை காலை தாம்பரம் ரயில் நிலையம் சென்று அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify