Logo of Tirunelveli Today

திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் விரைவுபடுத்தப்படும் என புதிய ஆணையாளர் பேட்டி!

June 17, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த திரு.கண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் அவருக்கு பதிலாக திருச்செந்தூர் திருக்கோவில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த திரு.விஷ்ணுசந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்கள் திருநெல்வேலி புதிய மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார் . திருநெல்வேலி மாநகராட்சி புதிய ஆணையராக கடந்த 13/06/21 பதவியேற்றுக் கொண்ட திரு.விஷ்ணு சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்கள் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் தனது பணிகளை தொடங்கினார்.

புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு.விஷ்ணு சந்திரன் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  தான் 2015- ஆண்டு ஐ.ஏ.எஸ் முடித்து தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றி உள்ளதாகவும், வருவாய் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ள தனக்கு மாநகராட்சி நிர்வாகம் என்பது புதிதாகும் என்று கூறினார். மேலும்  திருநெல்வேலி மாநகராட்சியைப் பொறுத்தவரை பாதாளச்சாக்கடை திட்டம் , ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் காலதமதமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பழுதடைந்த சாலைகள், குடிதண்ணீர் பிரச்சனை என மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும், மாவட்டத்தின் முக்கிய நதியான தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify