Logo of Tirunelveli Today

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்ய குவிந்த பயணிகள்!

June 25, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

கொரோனா பெருந்தொற்று பரவலாக பெருகி வந்த நிலையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ரயில் சேவைகள் நிறைய ரத்து செய்யப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளாக பாசஞ்சர் ரெயில் அடியோடு நிறுத்தப்பட்டு உள்ள நிலையில், ஒரு சில பாசஞ்சர் ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்களாக மாற்றி இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக பயணிகள் வருகையும் குறைந்து விட்டதால் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், நிறுத்தப்பட்டிருந்த பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது பயணிகள் ரயில் நிரம்பியவாறு செல்வதையும், காத்திருப்போர் பட்டியல் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் காண முடிகிறது. திருநெல்வேலியில் இருந்து சென்னை, கோவை, பெங்களூரு மற்றும் முக்கிய நகரங்கள் செல்லவும், அங்கிருந்து திருநெல்வேலி திரும்பி வரவும் பெரும்பாலோனோர் ரயில்களில் முன்பதிவு செய்வதால் காத்திருப்போர் பட்டியல் எண்ணிக்கை நூறுக்கு மேல் மேல் தாண்டி உள்ளது.

நேற்று திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயிலில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்வதற்காக ஏராளமான பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று தாங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify