தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் சீராக செயல்படாத நிலையில்
இணையவழியில் தான் அனைவருக்கும் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. கடந்த 2021 மார்ச் மாதம் பள்ளிக்கூடங்களில் ஆண்டு இறுதி பொதுத்தேர்வும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வும் ரத்து செய்யப்பட்டதால், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்காக அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.
தற்போது இந்த கல்வி ஆண்டில் பள்ளிக்கூடங்களில் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கையை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வும் நடத்தப்படாததால், ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பதினோராம் வகுப்பிற்கு மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நேற்று முதல் பதினோராம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது.
மாணவர்களின் கல்வி பயிலும் திறன், ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள், ஆன்லைன் கல்வியில் பங்கேற்றது உள்ளிட்ட பல்வேறு நிலைகளை கருத்தில் கொண்டு பதினோராம் வகுப்பில் உள்ள வெவ்வேறு பிரிவுகளில் மாணவர்களுக்கு இடம் ஒதுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.