Logo of Tirunelveli Today

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் சார்பாக உணவு பொட்டலங்கள் விநியோகம்.

May 13, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

 Sri Nellaiappar Templeகொரோனா நோய் தொற்று தற்போது பரவலாகப் பெருகி வரும் சூழ்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று காரணமாகப் பலர் சிகிச்சை பெற மருத்துவமனையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் தமிழக அரசு நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்யவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகத் திருக்கோவில்கள்  நிர்வாகம் சார்பாகவும்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து நேற்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் நிர்வாகம் சார்பாக நேற்று திருக்கோவில் அன்னதான மண்டபத்தில் வைத்து சாம்பார் சாதம் தயாரிக்கப்பட்டு, உணவு பொட்டலங்களாகக் கட்டப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும், நோயாளிகளின் உறவினர்களுக்கும் இந்த உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டு இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை செய்தார்கள்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify