திருநெல்வேலி மாநகரில் உள்ளது பிரசித்தி பெற்ற காந்திமதி அம்பாள் உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில். இங்கு கடந்த 09/01/2022 அன்று தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், பத்தாம் திருநாளான இன்று தைப்பூச தீர்த்தவாரிக்காக சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள் திருக்கோவிலில் இருந்து சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்துக்கு எழுந்தருள வேண்டும். இந்நிலையில் தற்போது பரவி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக, கோவில் வழிபாட்டில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் இன்று நடைபெற வேண்டிய தீர்த்தவாரி உற்சவம், திருக்கோயிலுக்குள் உள்ள பொற்றாமரை குளத்தில் வைத்து நடைபெறும் எனவும், இந்த நிகழ்ச்சியில் பங்குபெற பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் திருக்கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.