கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் கோவில் கும்பாபிஷேகங்கள் மற்றும் திருவிழாக்கள் நடைபெற தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களுள் ஒன்றான திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர், ஸ்ரீ காந்திமதி அம்மை திருக்கோவிலின் ஆனிப் பெருந்திருவிழா இரண்டாம் வருடமாக ரத்து செய்யப்படுவதாக திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த திருவிழா நாட்களில் கொடியேற்றம் மற்றும் சுவாமி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இல்லாமல் சுவாமி சன்னதியில் அமைந்திருக்கும் உற்சவர் மண்டபத்தில் வைத்து பகலில் சிறப்பு அபிஷேகங்களும், மாலையில் சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனையும் நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் நடைபெறும் அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளை நெல்லையப்பர் கோவில் இணையதளத்திலும், சமூக வலைதளங்களிலும் நேரலையாக பக்தர்கள் கண்டுகளிக்க திருக்கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

பாலாக்ஷிதா
லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.
வாழ்க்கையின் மலர்ச் சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.
தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார்.
இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.
"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.
இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள்.
தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.