Logo of Tirunelveli Today

திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது!

June 25, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இந்த இசைப்பள்ளியில் பயில விரும்பும் மாணவ - மாணவிகளுக்கு வயது வரம்பு 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த படிப்புகளை 3 ஆண்டுகள் முழுநேரமாக படிக்க வேண்டும். முதலாம் ஆண்டுக்கு ரூ.152, இரண்டாம், மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.120 மட்டும் சிறப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாவட்ட அரசு இசைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வசதி, ரெயில் கட்டண சலுகை வசதி, அரசு மாணவர் விடுதி, மாதந்தோறும் மாணவர்களுக்கு தலா ரூ.400 கல்வி உதவித்தொகை மற்றும் இலவச சீருடை, இலவச சைக்கிள் மற்றும் இலவச காலணி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

அரசுப்பள்ளியில் மூன்று ஆண்டுகள் பயிலும் மாணவ - மாணவிகளுக்கு தமிழக அரசு தேர்வு இயக்கத்தால் தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. சான்றிதழை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவு மூப்பு அடிப்படையில் அரசு இசைப்பள்ளிகளிலும், தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை கோவில்களிலும் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடைபெறும் மாணவ - மாணவியர் சேர்க்கை உள்ளிட்ட விவரங்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள  0462-2900926, 9443810926 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify