Logo of Tirunelveli Today

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஜமாபந்தி நேற்று முதல் துவக்கம்!

June 24, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை  ஜமாபந்தி நடைபெறுவது வழக்கம். இந்த ஜமாபந்தியில் கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள வரவு செலவு கணக்குகள், பதிவேடுகள் ஆய்வு செய்து தணிக்கை செய்யப்படும். மேலும் பட்டா மாற்றம் செய்தல், தனிப்பட்டா வழங்குதல் உள்ளிட்ட வருவாய்த்துறை சம்பந்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த ஜமாபந்தி  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மானுர் தாலுகா அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.

மானூர் தாலுகா ஜமாபந்தி அதிகாரியாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் ஜமாபந்தியை தொடங்கி வைத்து, வருவாய் தீர்வாயம் கணக்குகளை ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் பலர் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை கேட்டு நேரிலும், கொரோனா அச்சறுத்தல் காரணமாக நேரில் வரமுடியாதவர்கள் இணையதளத்தின் மூலமும் கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். இந்த மனுக்கள் மீது உடனடியாக பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது.

இந்த ஜமாபந்தியில் 5 பேருக்கு வீட்டுமனை பட்டா, 2 பேருக்கு பட்டா மாறுதல், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டன. இதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் வழங்கினார்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify