Logo of Tirunelveli Today

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் கூடுதல் கொரோனா சிகிச்சை மையங்கள் துவக்கம்.

May 12, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் கொரோனா நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பாளையங்கோட்டை சித்த மருத்துவமனை ஆகியவற்றில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்கள் நிரம்பி வழியும் நிலையில், மாநகரில் உள்ள மகாராஜநகர் மாநகராட்சி திருமண மண்டபம், காந்திமதி மேல்நிலைப்பள்ளி வளாகம், பிரான்சிஸ் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகம் ஆகியவற்றில் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் மேலும் நோய் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவதால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக மேலும் சில கொரோனா சிகிச்சை மையங்களைத் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் மக்கள் பயன்பாடின்றி நல்ல நிலையில் இருக்கும் அரசுக்குச் சொந்தமான கட்டிடங்களைக் கையகப்படுத்தி தற்காலிக  கொரோனா சிகிச்சை முகாம்களாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். இதில் முதற்கட்டமாகத் தற்போது பாளையங்கோட்டை அகில இந்திய வானொலி நிலையம் அருகில் உள்ள டிஸ்ட்ரிக்ட் கிளப் கட்டிடம் தற்காலிகமாகக் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது. இந்த டிஸ்ட்ரிக்ட் கிளப் கட்டிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் பல்வேறு சர்ச்சைகளால் மாநகராட்சியால் மூடிச் சீல் வைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த இந்தக் கட்டிடத்தை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தி தற்போது தற்காலிக கொரோனா சிகிச்சை மற்றும் உபகரணங்கள் பாதுகாப்பு மையமாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல அடுத்ததாகப் பாளையங்கோட்டையில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தின் கட்டிடமும் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப் பரிசீலிக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify