Logo of Tirunelveli Today

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்த தானம் செய்தார்!

June 15, 2021
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

உலக குருதிக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி ஆட்சித்தலைவர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாமில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் ரத்த தானம் வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

ரத்த தானம் வழங்கிய பின்னர் ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள், உலக குருதிக்கொடையாளர் தினம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் அதிகமாக ரத்ததானம் செய்யும் ரத்த கொடையாளர் கவுரவிக்கப்படுவார்கள். உலக சுகாதார நிறுவனம் வழங்கிய இந்த வருடத்தின் மேற்கோள் "உதிரத்தை கொடுத்து உலகத்தை துடிப்புடன் வைத்திருப்போம்" என்பதாகும். பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ரத்த தானம் வழங்க முன்வர வேண்டும். பொதுமக்கள் மத்தியில் ரத்த தானம் வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்கள் கணேஷ் குமார், சசிகலா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் மணிமாலா, ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் ரவி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify